நீயின்றி நானேது

நீரின்றி உலகேது,
நீயின்றி நானேது,
நீயில்லா என்வாழ்வில் பொருள்யாது?

நித்தமும் உன்நினைவு என்னுள்ளே,
நிழலும் வரமறுக்கிறது என்பின்னே,

அன்பு மழை பொய்த்துவிட்டதா - ஏன்
கண்ணீரால் காப்பாற்ற முயல்கிறாய்
என்னிதயத்தை,
ஒர்துளி காணும் போதே இறந்துவிடும்
என்பதை மறந்துவிட்டயா,

இதயம் கணத்துவிட்டதா - ஏன்
இறக்கிவைத்துவிட்டாய் பெண்ணே?
இறந்துவிடும் என்று தெரிந்தும்
இரக்கமில்லையா ,

கண்ணில் தோன்றி கண்ணீரில் முடியும்
காட்சியோட்டமா என்காதல்?
கண்ணில் தோன்றி இதயத்தில் வாழும்
உயிரோட்டமே என்காதல்,

நீரில் வாழ்ந்த நம்மை
நிலத்தில் தூக்கி எறிந்தவர் யார் பெண்ணே?
கவலையில்லை எனக்கு
நம்காதல் மழையை கொண்டு
நம்மை சேர்க்கும் பெண்ணே...........

எழுதியவர் : செ.நா (27-Jan-18, 12:30 pm)
Tanglish : kaadhal mazhai
பார்வை : 394

மேலே