முதுமொழிக் காஞ்சி 7

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று. 7

சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நல்ல குலத்தில் பிறந்தவன் என்று சொல்லப்படுதலை விட,
உயர்ந்த நற்கல்வி கற்றுத் தேர்ச்சியடைந்தவன் என்று
கூறப்படுதலே சிறப்பாகும்.

பதவுரை:

கற்பு - ஒருவர் கல்வி உடையராதல்,

குலன் உடைமையின் - நற்குடிப் பிறப்பு உடையராதலைக்
காட்டிலும்,

சிறந்தன்று - சிறப்புடையது.

கருத்து:

உயர்குடிப் பிறப்பினும் கல்வியே.சிறந்தது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jan-18, 3:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 63

மேலே