முதுமொழிக் காஞ்சி 7
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று. 7
சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நல்ல குலத்தில் பிறந்தவன் என்று சொல்லப்படுதலை விட,
உயர்ந்த நற்கல்வி கற்றுத் தேர்ச்சியடைந்தவன் என்று
கூறப்படுதலே சிறப்பாகும்.
பதவுரை:
கற்பு - ஒருவர் கல்வி உடையராதல்,
குலன் உடைமையின் - நற்குடிப் பிறப்பு உடையராதலைக்
காட்டிலும்,
சிறந்தன்று - சிறப்புடையது.
கருத்து:
உயர்குடிப் பிறப்பினும் கல்வியே.சிறந்தது.