இறைவன்

அனைத்து உயிர்களிலும் இறைவன் உறைந்துள்ளான்🌃⛪🕍
எனவே பிற உயிர்க்கு தீங்கிழைப்பது
இறைவனுக்கு செய்த தீங்கு ஆகும்💐
ஆண்டவர்முன் நாம் நிற்கும் போது
நம்மிடம் அகத் தூய்மையை மட்டுமே
அவன் எதிர் பார்க்கிறான்🌼
வேறு எதையும் படையுங்கள் என்று
கேட்டதில்லை;🌼ஒரு வீட்டிற்கு விருந்தாட செல்லும் போது வெறுங்கையுடன் போவதில்லை/
அவர்களாக எதுவும் கேட்பதில்லை/
நாமாகவே வாங்கி போகிறோம்,🌼
அது போலத்தான் இறைவனுக்கு
நாம் படைப்பது/
இறைவனிடம் வேண்டுவதற்கு
மந்திரம் தெரியவில்லை, பாட்டு பாட
தெரியவில்லை என கவலை வேண்டாம்/இறைவன் முன் நின்று
மனமுருகி வேண்டி இரண்டு சொட்டு
கண்ணீர் விட்டால் போதும்/
அதுவே கோடானு கோடி மந்திரங்களுக்கு சமமாகும்🌼
மனம் ஒருகுரங்கு, அது அங்கிங்கென தாவிக் கொண்டே இருக்கும்,அதை ஓரிடத்தில் கட்டி வைப்பது இறை பக்தி ஆகும்/
நம்மை படைக்கும் போதே நம் வாழ்க்கை தேவை அனைத்தையும்
சேர்த்தே இறைவன் படைத்து விடுகிறான்/ அதை தேடி சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள உதவும் திறவுகோல் தான் இறை வழிபாடு🙏
நம் கவலைகளை தாங்கும் சுமைதாங்கியே இறைவன்🌼
நாம் எதைத் தேடி அலைகிறோமோ
அதை நமக்குள்ளே படைத்திருக்கிறார் ஆண்டவர் 🌼அவனின்றி ஓர் அணுவும் அசையாது
🙏வணக்கம்🙏

எழுதியவர் : பாலமுருகன் பாபு (6-Feb-18, 10:06 am)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : iraivan
பார்வை : 488

சிறந்த கட்டுரைகள்

மேலே