முதுமொழிக் காஞ்சி 18
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
சொற்சோர்(வு) உடைமையின் எச்சோர்வும் அறிப. 8
- அறிவுப்பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
சொற்சோர்வு படச் சொல்லுதலான் அவனுடைய எல்லாச் சோர்வையும் அறிவர்.
ஒருவன் சொல்லும் சொல்லில் அறிவின்மை வெளிப்படுதலால், அவனுடைய அறிவின்மை மற்ற எல்லா விதங்களிலும் வெளிப்படும்.
சோர்வு - வழுவுதல். சொற்சோர்வு - சொல்லவேண்டுவதை மறப்பான் ஒழிதல்,
சொற்சோர்வு – அறிவின்மை;
ஒருவனிடத்தில் பலவித சோர்வுகள் உண்டு என்பதற்கு அவனுடைய சொற் சோர்வே அறிகுறி.
'சொற்சோர்வு படேல்' - ஒளவையார்.
'சொல்லுங்காற் சோர்வின்றிச் சொல்லுதன் மாண்பினிதே.' - இனியவை நாற்பது.