முதல் காதல்

தொடங்கும் போது தோன்றவில்லை,
தொலைதூர பயணமென்று,
நட்பை நம்பி நகர்ந்த நாளில்,
தயக்கமில்லை , தடையுமில்லை
கள்வனை கண்டபோதும்,
காதலில்லை, களவுமில்லை,

கால் நடந்த பாதையிலும்,
கை கோர்த்த வேளையிலும்,
கண் பார்க்க வழியில்லை,
ஓயாத பேச்சிலும் ஒரு வார்த்தை பதிலில்லை,

பதிலளித்த வேளையில்,
ஒற்றை பயணம் உறுதியானது
என் பாதி இவன் என பத்திரம் பதிவானது.....

எழுதியவர் : மதி (8-Feb-18, 12:57 am)
Tanglish : muthal kaadhal
பார்வை : 466

மேலே