முதல் காதல்
தொடங்கும் போது தோன்றவில்லை,
தொலைதூர பயணமென்று,
நட்பை நம்பி நகர்ந்த நாளில்,
தயக்கமில்லை , தடையுமில்லை
கள்வனை கண்டபோதும்,
காதலில்லை, களவுமில்லை,
கால் நடந்த பாதையிலும்,
கை கோர்த்த வேளையிலும்,
கண் பார்க்க வழியில்லை,
ஓயாத பேச்சிலும் ஒரு வார்த்தை பதிலில்லை,
பதிலளித்த வேளையில்,
ஒற்றை பயணம் உறுதியானது
என் பாதி இவன் என பத்திரம் பதிவானது.....