காதலே

அழகொழுகும் ஒரு நிலவாய்
என் அவள் தெரிந்தவள்..
ஒளியொழுகும் ஒரு மெழுகாய்
என் இருள் திறந்தவள்..!!

என் நடைபாதையெல்லாம்
நறுமணப் பூக்கள்..
உடன் நடந்தவள் உன்னோடே
நகர்ந்தன நாட்கள்..!!

உன் உருவம் அகற்றிய
என் பார்வையும் இல்லை..
உன் புருவம் இயற்றிய
என் கவிதைக்கில்லை எல்லை..!!

என் மெளன நொடிகளுக்குள்
மழையெனப் பொழிந்தவள்..
அவள் கன்னம் கடிப்பதற்குள்
சிகையெனக் கலைந்தவள்..!!

உன் நாசிக் காற்றினில்
நான் வாழ்ந்திட வேண்டி
உன் மேல் உதட்டின் மேலே
குடிசை வீடு கட்டி குடிபுகுவேன்..!!

இக்கறை மோதும் கடலோடு
நான் மட்டும் அமர்ந்திருக்க
அக்கறையோடும் அதனையே
செய்து கொண்டிருக்கும் காதலே..!

உப்புக் காற்றிலும் கூட
உனது வாசனையையே
உணர்கின்றேனடி..!!!!!


செ. மணி

எழுதியவர் : செ. மணிகண்டன் (15-Feb-18, 12:07 am)
Tanglish : kaathale
பார்வை : 151

மேலே