இன்பமழை

என்றென்றும் வெல்லும் அன்பிற்கு வயதில்லை
அன்பினை வளர்க்கச் சொல்வதில் தவறில்லை
பூவிற்கு மதிப்பூட்டும் அப்பூவின் வாசம்
அன்பினை பகிர்ந்திட வளர்ந்திடும் பாசம்

அன்பினைக் கொண்டிருக்க மதிப்பு தேடிவரும்
அன்பினை பரப்பிட‌ மரியாதை கூடிவிடும்
அன்பான பேச்சைத்தானே எல்லோரும் நாடுவது
அன்பின் புகழையே பலரிங்கே பாடுவது

தோட்டத்து பூக்களுக்கோ பல வண்ணம்
நாட்டுக்குள் மக்களுக்கோ பல எண்ணம்
அன்பென்ற எண்ணமேந்தும் மழலையாக மாறிட‌
என்றென்றும் வாழ்வினிலே இன்பமழை பெய்திருக்கும்

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (18-Feb-18, 9:27 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 163

மேலே