நிழலாக நான்

நமக்கான நெருக்கம் குறைய
கண்ணீரில் கண்கள் நனைய
அன்பு மட்டும் நிறை குடமாய்
நம்மில் தழும்புகிறது...!!!!

உறவுகள் கூடி உன்னை வாட்ட
வாடிய உன் உணர்வுகளுக்கு
நானும் அன்பெனும் நீரூட்ட
புத்துயிர் பெறுவாய் என் முன்னே...!!!!

காரிய மேகத்தில் ஒளி தந்தவள் நீ
கலைந்து விடும் கனவாக
உன்னை எண்ணமாட்டேன்
நீயே என் உயிராகி விட்டதால்...!!!!

என் உயிராகவும் உணர்வாகவும்
நீயே நெஞ்சம் நிறைந்திருக்க
உயிரற்ற உடலாகி போவேன் அன்பே
நீ என்னை நீங்கி சென்றால்...!!!!

என்னில் நீ இருக்க துயரம் ஏன்
என் கண்மணியே
தளராது தொடர்ந்து நில்
உன்னுடன் நானிருப்பேன்...!!!!

இறுதி வரை உன் நிழலாகவே
தொடர்ந்திருப்பேன்...!!!!
✍️Samsu✍️

எழுதியவர் : சம்சுதீன் நெல்லை (21-Feb-18, 2:22 pm)
Tanglish : nizhalaaga naan
பார்வை : 221

மேலே