எனக்கிருக்கும் ஆசையெல்லாம்

"கல்யாணமாலை கொண்டாடும்
பெண்ணே" என்ற பாடலின்
ராகத்திற்கு நான் எழுதிய வரிகள்.


மந்தாரைமலரே...
செந்தாரைநிலவே...
விருந்தாக உனையே
தருவாயா ரதியே???
மந்தாரைமலரே...
செந்தாரைநிலவே...
விருந்தாக உனையே
தருவாயா ரதியே???
விழியோடு விழி சேரவே
மனதோடு மனம் சேர்ந்தோம்
இனும் எதற்கு சங்கோஜமே...

மந்தாரைமலரே......

உன் தேகம் எனும் சோலை
நம் காதல்பூ பூக்க....
காமத்தேன் அருந்த
நினைத்தேனம்மா!!!
மேகமழை பொழிய
புவிவெப்பம் தனியும்
முத்தமழை பொழியேன்
நான் தனிவேனம்மா!!!

நான்....உன்
பண் பாடும் புலவன்
கவிபாடும் கவிஞன்
உனை நினைக்காத நாளில்லையே...
நம் விரல்களினை கோர்த்து
இதழ்களினை சேர்த்து
நான் மகிழத்தான் வழியில்லையே
ஏன்????

மங்கை உந்தன் சிந்தை
மாறுவது என்று????
என் நெஞ்சின் வடுவெல்லாம்....
ஆறனுமே தோழி
நீ இசைந்தாலே அது சாத்தியமே....

மந்தாரைமலரே....

அ.ஜீசஸ் பிரபாகரன்

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (22-Feb-18, 6:52 pm)
பார்வை : 711

மேலே