காதல்

அவள் மலர்விழிகள்
அவன் வேல்விழிகளைத்தாக்க
வேல்முனைகள் மழுங்கினவே
வெற்றியில் மலவிழிகள்
சிரித்தனவோ , இப்பார்வைப்போரில்
வெற்றிவாகை சூடிய மங்கை அவள்
பவளவாய்த்திறந்து புன்னகைசிந்த
வெண்முத்து பரல்களென அவை
தெறித்து ஒளி சேர்க்க அந்த
ஒளிபட்டு அவன் இதயம்
திறந்து கொள்ள ஒளியும்
உள்ளே இதயம் மூடியது
வேள்வியியான் வாய்திறந்தான்
சிரித்தான் , பெண்ணே உன் சிரிப்பை
என் இதயத்தில் பூட்டி சிறைவைத்தேன்
என்றான் ................ அதற்க்கு அவள்
'அதற்காகத்தான் தவமிருந்து
காத்திருந்தேன்' என்றால்
மீண்டும் வாகை சூட்டினால்
அது காதல் வெற்றி மாலை
அவள் இப்போது அவன் காதலி
அவன் சொன்னான், இப்போது,
'நீ என் காதலி என்றால் ,உந்தன்
காதலன் அல்லவோ நான்'
இது இருவருக்குமே வெற்றி
அறிவாய் தங்கமே தங்கம்
காதல் தோட்டத்தில் ஓடி
விளையாடிடுவோம் காமன்
தந்த விளையாட்டு
நாணம் அச்சம் நமக்கு இனி
எதற்கு , எனக்கு நீ , உனக்கு நான்
என்றானபின்னே ..............
அதற்கு அவள்' காதல்
கனிந்த பின்னே காமத்தின்
வேட்கை அடக்கிடவேண்டும்
அன்பே , அன்பை சேர்த்து
மெல்ல மெல்ல அதை
அனைத்திடலாம்....
அணைத்திடலாம் .. என்றால் '

எழுதியவர் : வாசுதேவன்-தமிழ்பித்தன்-வ (23-Feb-18, 4:30 am)
Tanglish : kaadhal
பார்வை : 79

மேலே