காதல்பாசம்

என் சேய்க்கு மட்டும் நீ தாயல்ல;
எனக்கும் தாய்ப்பாசம் காட்டிய தாரகை நீயே★
முந்தானைக்குள் பொதிந்து வைத்த
சேயாய் எனை அணைக்க, நான் மந்தையில் கிடக்கும் ஆடாய் மதிமயங்கி கிடையாய் கிடக்கிறேன்;
சீறும் சிறுத்தையாகத் திரிந்தவன்
உன் கண்ணில் கருணை கண்டதும்
நீரும் வேருமில்லாது வீழ்ந்த நெடுமரமாய் உன் பாசத் தாள் வீழ்கிறேன்★ பாசத்தால் உருகினேன்★நீ உருவத்தில் சிறுத்தாய்(அல்லது சிறு தாய்)
பாசத்தில் பெருத்தாய்(அல்லது பெருந் தாய்) ★உன் அன்பிற்கு
கைம்மாறு மறுத்தாய்; நீயே என்
மறு தாய்★🎎சேயாய் எனை சேர்த்தாய் 🎎

எழுதியவர் : பாலமுருகன்பாபு (23-Feb-18, 5:38 am)
பார்வை : 148

மேலே