இரத்த போர்

மனிதத் தனத்தின் முற்றுப்புள்ளியாய்
மனிதன் மனிதனை அழிப்பதுவோ?
மனித இனமே சரிந்து போயின்
நிலத்தை எலும்புகள் ஆள்வதுவோ?
வீசும் எரிபொருள் வீசியபோது
விழுந்து எரிந்தது பிஞ்சுகளோ!
காணும் காட்சிகள் கண்டபொழுது
கண்ணீர் மட்டும் மொழிகளோ!


தலைமுறை அங்கு தலைகளின்றி
தத் தளிப்பதை பாருங்கள்!
தாயின் சடலம் எதுவோ யென்று?
தேடும் பிள்ளையை பாருங்கள்!
நடப்பவை எல்லாம் எதற்கு என்று?
கேட்கும் கண்களை பாருங்கள்!
இன்னும் கூட சொல்ல வேண்டுமா?
அதோ! குழந்தை சிரிப்பை பாருங்கள்!


நாளைய ஔிகள் நிரந்தர இருட்டில்
வாழும் நிலைமை வருகிறதே!
எஞ்சிய உயிர்கள் கா ணொளியில்
உயிர் பிச்சை கேட்கிறதே!
நடப்பவை எல்லாம் பார்த்துக்கொண்டே
பாதி உலகம் நிற்கிறதே!
பொய்கள் இங்கு வென்றுகொண்டால்
ஆண்டவன் தீர்ப்பு இருக்கிறதே!


வலிகள் தாங்கிய அனைத்து உயிரும்
வழிகள் தேடித் செல்லட்டும்!
தாயை இழந்த வளர் பிறைகள்
பூமியை ஆள நேரட்டும்!
காலம் கடந்து போர்கள் முடிந்து
மிஞ்சிய உயிர்கள் வாழட்டும்!
இதுபோல், ஒருநாள் நமக்கும் நடக்கும்
அன்று, மனிதர் உணரட்டும்!

எழுதியவர் : (27-Feb-18, 11:43 am)
பார்வை : 60

மேலே