கொஞ்சம் மரணத்தில்
புகைச்சலாக இருக்கிறது
மனமும்
மனமற்ற மனித குணமும்...
அறுந்துபோன அனைத்தையும்
தேடி செல்கையில்
எப்போதும் இடறியது
ஒன்றை இன்னொன்று...
கிடைத்த எதுவும்
மனக்காய்ச்சல் மருந்தல்ல...
இப்படித்தான் நான்
மெல்ல மரணித்தேன்.
இருப்பினும் நம்புகின்றனர்
என்னுள் இன்னும்
எதுவோ இருப்பதாக...