ஏவாள்--- கலியுகம் 5118
பாம்புகள் என்
படுக்கையில்...
உறங்க விடாமல்
நெளிகின்றன..
ஊர்கின்றன உடலில்
விறகென மோகத்தில்.
என் மூச்சொலி
கேட்டு தாபத்தில்
நடுங்குகின்றன.
ஒவ்வொரு கணமும்
விஷம் துப்பி
கனவைக்கொன்று
முலை நடுவில் சுருளும்.
துயில்நுனி கொத்தி
விழிப்பினைச்செருகி
யோனிக்கு அலறும்.
புஸ்சென்ற ஓசையில்
ஏவாளின் கனி புல்லில்
தெறித்து விழும்.
நெளிதல் மெல்ல
உடல் நெறிக்க
திராவகம் நிரப்பி
சூல் கொள்ளும் இரவு.