பொம்மலாட்டம்

நிலையில்லா இவ்வுலக அரங்கில்
அவரவர் வாழ்வுக் கதையில்
விதியெனும் நூல் கோர்த்த
நூல் பொம்மைகள் நாமெல்லாம்
காட்சிக்கு காட்சி இன்பமும்
துன்பமும் வெற்றியும் தோல்வியும்
என்னும் அவன் தரும்
இசைவுக்கு எல்லாம் இயைந்து
போகத் தான் வேண்டும்
எதிர்யியைவுக்கு அசைந்தால் நூல் அருபட நம் வாழ்வும் முடிவுறுமே

#மானுடா.......!

எழுதியவர் : விஷ்ணு (5-Mar-18, 7:27 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 177

மேலே