கல்லறை பயணம்

எனக்காக விழி நீர் .
வடிக்காதே
உன் விழி கலங்கினாலே
என்னால் தாங்க இயலாது..

சேர்த்துவை உன் விழி நீரை..
என் கல்லறைக்கு
செல்ல பயணிக்கும்
அந்த நாளில் எனக்காக
ஒரே ஒரு சொட்டு விழி நீர் சிந்து..
அது போதுமடா எனக்கு..

ஏன் என்றால் நம் அன்புக்கு
சாட்சி அது மட்டும் தானடா..

காத்திருக்கிறேன்
உன் விழி நீர்க்காக ..

எப்பொழுது வரும்
என் கல்லறை பயணம்
என எண்ணியே ...

எழுதியவர் : Roja (13-Mar-18, 4:04 pm)
சேர்த்தது : ரோஜா
Tanglish : anbu
பார்வை : 124

மேலே