நீயற்ற என் உலகம்

உலகமே இருளாய்., மனம்
தெளிவற்று கலங்கிய குட்டையாய்.,சுழலில்
சிக்கித்தவிக்கும் தோணியாய்.,
பித்தேறிப் பிதற்ற.,
எதுவும் செய்யாது
உன் நினைவுப்புதைகுழிக்குள்
மூழ்கும் நான்.,எழ மனமின்றி.,
ஏன்? புதைந்தாலும் உன்
நினைவுதானே..!உனை
மறுப்பதும்., மறப்பதும்
மரணித்தலுக்குச்சமம்.,
அதுதானே என்னை உன்
நினைவற்று பிரிக்கும்..,
உன்னைக்காணாத கண்கள்வீண்...!
நினைவற்று வாழ்வதற்கு
வீழலாம் மண்ணில்.,
நீயில்லா நாட்கள்
நீளமாய்.,சுழன்ற என்
உலகம் நின்றும்.,
நினைவுச்சக்கரம் தேயாது
உருள அதனடியில் நான்...,
எனை வந்து காப்பாயா...

எழுதியவர் : sana (14-Mar-18, 11:14 am)
சேர்த்தது : Sana
பார்வை : 439

சிறந்த கட்டுரைகள்

மேலே