உலக மகிழ்ச்சி தினம்

மறந்து கூட சிரிக்காதவர்களையும்
சிரிக்க மறந்தவர்களையும்
சுமக்கும் உலகமிது
சுற்றித் திரிகிறது
சுகமாக....
பூப்பூக்கும் பூமிதனில் பூகம்பமும் பூக்கும் எனப்
போக்கும் பொழுதெலாம்
போக்கு காட்டித் திரியும்
பூபாலர்களைச் சுமக்கும்
பூமி இது
பூத்துக் கிடக்கிறது
காத்து கூட இல்லாமல்....
மெல்ல நடை பழகும் மழலைக்கும்
இல்ல விருந்தினருக்கும்
கள்ளருக்கும்
வில்லருக்கும்
அல்லாருக்கும்
தள்ளார்க்கும்
இல்லாருக்கும்
எல்லாருக்கும்
இல்லை எனச் சொல்லாது,
இன்னா செய்தார்க்கும்
இடமளிக்கும்
நானிலம் கொண்ட நற்புவி
தாவித் திரிகிறது
மகிழ்ச்சித்
தாகம் தணிக்க....
யாவரும் தொலைத்த
தொன்பொருளாய், அருபொருளாய், மருந்துக்கு மாற்றுப் பொருளாய்.....இக்-
காத்துக் கிடக்கும் சமூகத்தில்,
வேர்த்துக் கிடக்கும்
சாமானியனுக்கு என்ன சாபமோ!
சாதாரணமாய்
ரணமிருந்தாலும்
சரமாரியாய்
கனமிருந்தாலும்
மனதாரச்சிரிப்பான்
மணம் வீச
மனம் நொந்து கிடந்தாலும்
தின வேலையில் வேள்வித் தீயாய்
வேலை வளையிலும்
காலை மாலையிலும்
கண்ணில் சோர்வும்
கண்ணத்தில் வியர்வையும் வழிய
அதை
முகத்தில் சுமந்திருப்பான்
*~மகிழ்ச்சி~*

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (20-Mar-18, 5:44 pm)
பார்வை : 400

மேலே