மீனாட்சி மோகன்குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மீனாட்சி மோகன்குமார்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  23-Mar-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Jan-2017
பார்த்தவர்கள்:  716
புள்ளி:  53

என்னைப் பற்றி...

தமிழச்சி நான்rnஉங்கள் தோழிrnதமிழின் மகள்rnதாயின் காதலிrnதந்தையின் தாய் rnதமயன்களின் தமக்கை rnதமக்கைகளின் ஆசிரியைrnஉற்றார்க்கு உரியவள்rnஅற்றார்க்கு உறவானவள்rnநான் மீனாட்சி...

என் படைப்புகள்
மீனாட்சி மோகன்குமார் செய்திகள்
மீனாட்சி மோகன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2024 8:13 am

காதல் கானல் நீர் ஆவது போல் கனவு கண்டு துவண்டு போகும் உனக்கு கனவில் கூட காதலிக்கத் தகுதி இல்லை...
அடிபட்டு மிதிபட்டு அவமானமும் பட்டு
அவள் கைப்பிடித்தால் போதுமென
அரிவாள் வெட்டு கூட பட்டதுண்டு
நம் ஊர் காதலர்கள்...
அவர்களைப் பார்த்தும் அறிவு பெறாத நீ...
காதலில் வெற்றி பெற்று என்ன பயன்?

நீ காணக்கிடைக்காத ஆயிரம் கனவுகள் என் கண்களில்... அவற்றை நீயும் நானும்
சேர்ந்து காண காத்திருந்த எனக்கு
நீ இன்ப அதிர்ச்சி தர வருவாய் என எண்ணி எண்ணி எண்ணி....
எண்ணியது நாட்களை மட்டுமே என காதல் நோயுடன் எண்ணும் தருணம் இவ்வளவு விரைவிலா...

அடக்கடவுளே...
பல முறைக் கனவில் உன் சந்நிதானத்தில் தானே அவன் கைப்

மேலும்

மீனாட்சி மோகன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2021 10:09 am

எங்கு தேடியும் கிடைக்கவில்லை!
அம்மா, அப்பா, அண்ணன், அக்கா- யாரிடம் கேட்டும் பயன் இல்லை...
யாவரும் அவனைத் தேடி தான் அலைகின்றனர்.....
அப்படி அவன் எங்கு தான் சென்றிருப்பான்? - என வெளியே கேட்டால்...
அவன் பெயரை கூட சிலர் மறந்து விட, மற்ற சிலர் நினைவூட்ட, வேறு சிலர் கிடைக்க வாய்ப்பில்லை என... ஆனாலும்
அவனை இப்பொழுதும் எல்லோரும் தேடுகிறார்கள்.....
கிடைத்தால் சொல்லுங்கள்...
அவன் பெயர் - நிம்மதி!

மேலும்

மீனாட்சி மோகன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2021 10:41 am

எத்தனை தான் கவிதை படைத்தாலும் - அதில்
வருவதே இல்லை....
என் தங்கை எழுதிய முதல் எழுத்தின் அழகு!
மழலை மொழி மாறா கையெழுத்து!!

மேலும்

மீனாட்சி மோகன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2021 8:58 am

ரசித்து
மறுத்து
சகித்து
சலித்து
அதில் கூட
லயித்துப் போக செய்வதே...
காதல்...

மேலும்

மீனாட்சி மோகன்குமார் - மீனாட்சி மோகன்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2019 12:03 pm

வீட்டு தோட்டத்தில் முளைக்கும் விதைக்கும்,
நேற்றுப் பிறந்த என் தம்பிக்கும்,
தோழியின் தோல் நோய்க்கும்,
உற்ற நண்பன் பகலவன்...
கொத்திக் கொல்லும் கொசுவுக்கு எதிரி.
பகலில் இல்லாத விளக்கிற்கு இவன் தான் திரி...
பச்சிளங்குழந்தையின் மஞ்சள் காமாலைக்கு மரண சங்கு இவன்.
நோயெதிர்ப்பு சக்தி தர இவனுக்கு பங்கு எவன்?
மூளை முடக்கத்தையே முடக்கிடுவான்; கால்சியத்தை கிரகித்திடுவான்.
கண்ணுக்கு ஆற்றல் தருவான்
மின்னுக்கு சக்தி தருவான்- இவன்
மண்ணுக்கு வளம் தருவான்
தண்ணீருக்கு களம் தருவான்
இவனில்லா அவனியிலே-வாழ
எவனாலும் இயலாது
வெயில் என்றால் வேதனையா?
நிழலில் மட்டுமே நின்று பார்...
வெயிலின் அருமை நிழலில்

மேலும்

கொசுவின் உச்சகட்ட தொல்லையை..... அவ்வாறு குறிப்பிட்டுள்ளேன்.மன்னிக்க.... 27-May-2019 10:06 pm
"கொத்திக் கொல்லும் கொசுவுக்கு எதிரி" வரியில் மரபு பிழை உள்ளது. கொசு கடிக்கும் என்பதே சரி. புனைவு சிறப்பு. 10-May-2019 2:10 pm
மீனாட்சி மோகன்குமார் - மீனாட்சி மோகன்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2018 11:43 pm

மாந்தர்...
கடவுளை,
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பார்கள்,
கடவுளுக்கு கண்ணில்லை என்பார்கள்,
ஆனால்...
உண்மையில்,
கடவுளே இல்லை எனக் காட்டியது நம் ஊமைச் சமூகம்-
ஆசிஃபா வாயிலாக...

மேலும்

நன்றி ஐயா..... நிச்சயமாக 15-Apr-2018 9:37 am
கவிதையில் என்ன ஒரு தாய்மை...துக்கம்... பரிதவிப்பு... சுவரில் முட்டிக்கொண்டே இருந்தேன்...நாட்டை நினைத்து....இப்படி நிறைய எழுதுங்கள். 15-Apr-2018 9:30 am
மீனாட்சி மோகன்குமார் - Saravanan D அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2018 1:20 pm

பிரித்து எழுதுக பலகை

மேலும்

பிரித்தால் உடைந்து மட்டுமல்ல பிரிந்தும் படந்தும் போகும். பல+கை-பல கைகள் பல்+அகை{கிளை}- பல கிளைகள் 09-Apr-2018 5:20 pm
பலகையை பிரித்தால் உடைந்து போகும் பலகை ---ஒரே சொல் . பல + கை என்று பிரிக்கலாம் பல கை என்று இரண்டு சொற்களாகக்கப் பிரித்துதான் எழுத வேண்டும் . பல பன்மையை குறிக்கும் சொல் . பல கைகள் என்று எழுதுவதே மிகவும் சரி. ஒருவேளை சமத்காரம் கருதி இவ்வாறு கேட்டிருக்கலாம் . வாழ்த்துக்கள். சிந்திக்கத் தூண்டியது . 07-Apr-2018 2:40 pm
மீனாட்சி மோகன்குமார் - முத்துத் தமிழன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2018 2:07 am

ஐயா மற்றும் அய்யா

ஔவையார் மற்றும் அவ்வையார்

என்ற வார்த்தைகளின் பயன்பட்டு வேறுபாடுகள் என்ன?

மேலும்

ஐயா-அய்யா சொற்களின் பொருள் வேறுபாடு: அய்யா என்ற சொல் தந்தை அல்லது வயதில் முதியவர்களை அழைக்க பயன்படுத்தக் கூடியது. ஐயா என்ற சொல் அரசன், ஆசான், குரு போன்ற மதிப்பிற்குரியவர்களை அழைக்க பயன்படுத்தக் கூடியது. tamilkaru thagaval 09-Apr-2018 10:01 am
'ஐ என்பதை அய் என்று சொல்லிவிடலாம் என்றால் பின் அந்த எழுத்துத் தமிழ் நெடுங்கணக்கில் எதற்கு?' அதுவும் இருக்கட்டும் இதுவும் இருக்கட்டும். வழக்கு நோக்கி எது நிற்கிறதோ அது நிற்கட்டும்-தொல்) "அகர இகரம் ஐகாரம் ஆகும்” “அகர உகரம் ஔகாரம் ஆகும்” “அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்” - என்று பயன் பாட்டிற்கு உடம்பு மெய்,புணர்ச்சியில் மட்டுமல்ல புரிதலிலும் இவ்விரு பயன்பாடுகளும் சரியானது,நிகரானது என தொல்காப்பியரே சொல்லிவிட்டார். இச்சொற்களைப் பொறுத்தமட்டில், இரு பயன்பாடுகளும் சரியே. 08-Apr-2018 6:06 pm
ராஜ்முத்து ஐயா ராஜ்முத்து அய்யா (புணர்ச்சி விதியால் ராஜ் முத்தையா ) எல்லாம் சரியே. ஐயா என்பதே முதல் சொல் . அய் என்ற இரண்டெழுத்தில் ஐ யின் ஓசை பெறப்படுவதால் ஐ க்கு மாற்றாக அய் என்று எழுதுவது வழக்கமாகியிருக்கிறது , அதுபோல் அவ் ஔ வின் ஒலி தருவதால் மூதாட்டிக் கவிஞை ஔவை க்கும் இது பொருந்தும். பயன்பாட்டைப் பொறுத்தவரை இரு முறைகளும் சரியே ! 08-Apr-2018 8:53 am

ஒவ்வொரு தமிழனின்
இரு கண்களால் உலாவி
முத்தமிழின் இனிமையை உணர
நாற்றிசையும் எக்களிக்க
ஐம்பூதமும் அடங்கிப் போகும்
அறுசுவை கொண்ட நம் தமிழிடம்
ஏழறிவால் உண்டான
எண்திசையும்
ஒன்றாகி
அம்மாவில் தொடங்கி ஔவியம் வரை
அச்சம் தவிர்க்க
ஆதாயம் நம் தமிழ்
இமயம் முதல் குமரி வரை
ஈதல் கற்பிக்கும்
வள்ளல் நம் தமிழ்
உன்னிடம் ஆரம்பித்து என்னிடம் கூட
உருகிக் தான் பேசும்
உரிமையுடன்
ஒற்றுமையில் வேற்றுமை என்றாலும்
ஒன்றுபட்டு நிற்கச் செய்யும்
ஓங்குதனிச் செம்மொழி நம் மொழி
என

ஏகபோகமாய் புகழத் தான் ஆசை

மேலும்

இரவை ரசிக்க இறகைப் போல் பறந்தேன் மாடிக்கு
இரவின் மகன் மடியில் உறங்க
நிலவவன் நிழலில் நின்று கொஞ்சத்தொடங்கினேன்
வெண்மகனே....
உன்னழகை ஊர் ரசிக்க
உனக்கே உரியவளாய் நான் உன்னை ரசித்தேன்.
ரசனையே இல்லாதவள் கூட, ரசிக்கத்தான் தொடங்கியுள்ளாள் இராக்(இரவு)காரன் உன்னை.
நிலவெனப் பெயர் கொண்டு, நில்லாமல் ஓடுபவனே.....
நிஜமாகத்தான் சொல்கிறேன்-நில்லென்று செல்லமாய்........
ஆடவனே.....
வெண்தேகத்தால் வெளிச்சம் தரும் உன்னால்
பெண் தாகம் தணியும்
தண்மையில் தாராளமான உன் ஆண்மைக்கு உலகம் பணியும்.
வீரனே......
உன்னைக் கண்டு ஓடி

மேலும்

Venmaiyana mayilai minjiya vennirathil enru porul sago 14-Jul-2017 8:12 am
இரவோடு நிலவு பல இதயங்களோடு இனிமையாய் உறவாடுகிறது. அழகான வரிகளை இதமாய் வருட வைத்தீர்கள்.. வாழ்த்துக்கள்.... அது என்ன நட்பே வெண்மயிலை மிஞ்சிய வெண்மையில்... 12-Jul-2017 10:51 pm
மீனாட்சி மோகன்குமார் - ந தெய்வசிகாமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jan-2017 11:42 pm

வெளியேறு வெளியேறு 'பீட்டா அமைப்பே' வெளியேறு !
வெளியேறு வெளியேறு இந்தியாவைவிட்டு வெளியேறு !!

கிடா கிடாவெட்டி சாப்பிடுவார்கள் இவர்கள்
மசாலாவுடன் கோழிக்கறியினை தள்ளுவார்கள் உள்ளே
பசுவின் கறியினையும் உண்ணுவார்கள் சேர்ந்தங்கே
மிருகவதை தடுக்கும் 'பீட்டா' இவர்கள்பெயர் !

களம் பலக்கண்டது எங்களது தமிழ்நாடு
காளையினையடக்கி வீரம் (செ)சொறிந்த தமிழ்நாடு
கோழையர்கள் என்று நினைத்தார்களா தமிழ்மக்களை
வீழவில்லை யென்றும் தன்மான தமிழர்கள் !

வெள்ளையருக்கு எதிராக விடு

மேலும்

நன்றி! உங்களின் கருத்திற்கு... 30-Jan-2017 3:33 pm
அருமை 29-Jan-2017 7:28 am
பீட்டா என்ற ஒன்றை பெரும்பான்மையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இப்பொழுதான் பீட்டா வெளிச்சத்திற்கு வந்துள்ளது... நன்றி! உங்களின் கருத்திற்கு... 23-Jan-2017 1:19 am
தங்கள் சினம் புரிகிறது நண்பரே. மாணவச் செல்வங்களின் போராட்டம் துவக்கப்படு ம் வரை ஏன் பீட்டா பற்றி மக் க ள் அ றியும்படி யாருமே பேசவில்லை பீட்டா இந்தியாவுக்குள் பல ஆண்டுகள் சென்ற பின்பும்? 23-Jan-2017 12:55 am

ஏனடி
எனக்குப் பிடித்த
கிளிப்பச்சை நிறத்தோடு,
பிடிக்காத சிவப்பு சேர்த்து சேலை உடுத்தினாய்.....?
உருத்தும் என் கண்கள்
உன் ஆடையைத் திருத்தும் நோக்கில் பின் தொடர்ந்து,
இப்போது வரைத் திரிகிறது
உன் பின்னால்.....
குறுகுறுவெனப் பார்த்து
உன் பின்னலின் நீளத்தில்
என் உள்ளத்தைப் பின்னிக்கொண்டு
உன் தோழியைத் தொட்டு நீ தள்ளும்போது
விழுகிறது என் மனம்
உன் முக பாவத்தில்......
வரிசைப் பற்கள்,
வகிடெடுத்த தலை,
வசப்படுத்தும் கண்கள்
என வலைவிரிக்கத் தான் இப்படி வந்தாயோ...!
தலைகுனிந்து நீ நடக்க
நானும் குனிந்துப் பார்த்தேன்...
என் விருப்பச் சிவப்புப் புடவையில்
நீ,என்னைப் பார்த்து சிவந்ததை..

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (20)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (21)

மேலே