உன்னுள்ளே

மயங்கி கிடப்பவளை மடியில் கிடத்தி
நீர் தெளித்து
எழுப்ப
மெல்ல கண் விழித்து மாமா என்று கூறி சிரிக்கிறாள்.
சிரிக்காத பிரபா
நீ ஒவ்வொரு முறையும் மூச்சு விட முடியாமல் நெஞ்சு வலியில்
நெஞ்சை அழுத்தி பிடித்தபடி மயங்கி விழும் பொழுது
ஒவ்வொரு முறையும்
என் இதயம் துடிப்பதை ஏன் நீ புரிந்து கொள்ள மாட்டேங்குற பிரபா...
ஆஸ்பிட்டல் போலாம் பிரபா...
எல்லாம் சரியாகிடும்...
எனக்கு நீ வேணும் பிரபா...நீ மட்டும் தான் வேணும்..
என் வாழ்க்க முழுக்க நீ எனக்கு வேணும் பிரபா...

உன் மடியில படுத்து தூங்கனேன்னா எல்லாம் சரியாகிடும் மாமா...

விழலுக்கு இரைத்த நீர் தான் என் பேச்சா பிரபா...என்று கூறிக்கொண்டே தூக்கிச் சென்று படுக்கையில் கிடத்தினான்.
பின் அவளுடைய மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டே
ஒரு நாள் இல்லை
ஒரு நாள் உனக்கு முன்ன
நான் இறந்துடணும் பிரபா.. அப்பத்தான் என் வலி உனக்கு புரியும்.
இதை கேட்ட மாத்திரத்தில் அவளுக்கு நெஞ்சில் வலியோடு மூச்சுத் திணறலும் சேர்ந்துக் கொள்ள...

ஆ ஆ... ஆ... ஆ ஆ...மாமா....
பிரபா என்று துளி கண்ணீர் அவள் நெற்றி பொட்டில் விழ
இறுக்கமாக பிடித்துக் கொண்டான்...
அவளின் நெஞ்சை நீவி விட்டு தடவி கொடுத்து
ஒன்னும் இல்ல பிரபா...
இங்க என்ன பாரு...
ஒன்னும் இல்ல..
சரியாகிடும்...
ஒன்னும் இல்லடா...
கண்ணை மூடப்பார்க்கிறாள்...
கண்ண மூடாதடா
என்ன பாருடா...
மாமா...மாமா...
ம்ம் சொல்லுடா...
நீ என் அருகில் இல்லாத மறு நொடியே என் உயிர் இப்படித் தான் இறந்து விடும் மாமா...என்று கூறிக் கொண்டு இருக்கும் பொழுதே கண் மூடிவிட்டாள்...

பிரபா.....ஐய்யோ......
பிரபா...பிரபா........
என்னை பாரு பிரபா...
எங்கிட்ட பேசு பிரபா...
எழுந்திருடி ...
நீ எங்கிட்ட மீண்டும் வர முடியாத தூரத்துக்கு போற...
ஆனா நான் உங்கிட்ட வர முடியும்.என்று கூறியபடி
அவளை அணைத்து
அவள் நெற்றியில் முத்தமிட்டு
அவள் மார்பில் சரிந்தான்...
அவள் நெஞ்சம் என்னும் உயிரில் கலந்தவன்...
இன்று அந்த நெஞ்சத்தோடு ஒன்றாக கரைந்தும் விட்டான்...

உன் மனைவி
~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (25-Mar-18, 11:09 pm)
Tanglish : unnulle
பார்வை : 441

மேலே