அப்பா

என்னவென்று சொல்லுவேன்
இந்த உறவை....
தத்தெடுத்தார் என்னை
பிறரின் மகளாய்..
வளர்த்தார் என்னை
அவரின் மகளாக/.....

பாசத்தை கொட்டினார்
அனைவரும் நெகிழும் படி ....
வளர்ந்தேன் நானும்'
அனைவரும் பெருமைபடும்படி

உறங்க வைத்தார் என்னை
தன் உறக்கத்தை தவிர்த்து
இப்பொழுது உறங்கி விட்டார்...
விழிக்க முடியாத நிலையில்...

மறந்தேன்,
என்னை பார்த்தவரை
நான் பார்க்க,

வெறுத்தேன்,
பார்க்க மறந்த
என் மனதை ....

தவிக்கின்றேன்,
அன்பை அளித்தவருக்கு
ஆடையை கூட அளிக்க
முடியவில்லையே என்று....

தேடாமல் கிடைத்த அன்பு...
தேடினாலும் கிடைக்காத நிலையில்,
தனிமையிலேயே இருந்தார்
தனிமையிலேயே இறந்தார்,

எங்கு புண்ணியம் செய்தேனோ...
இந்த உறவை அடைய...
எங்கு பாவம் செய்தேனோ...
இந்த உறவை பிரிய....
இழந்தேன் என் தந்தையை...
வருந்துகின்றேன் நாளெல்லாம்...

பிறருடைய எதிர்காலத்தை
கணித்து கூறியவர்,.....
அவருடைய எதிர்காலத்தை...
கணித்து கொண்டவர்...
பாடல்களை பாடிக்கொண்டு..
வேலைகளை முடித்தவர்...
வேலைகளை முடித்துவிட்டார்,...
ஓய்வு எடுக்கிறார்....
இந்த உலகம் அழியும் வரை....
என்றும் என் நினைவில்....

எழுதியவர் : bhuvichindan (26-Mar-18, 11:50 am)
Tanglish : appa
பார்வை : 228

மேலே