மழலை

என் கண்மணியே
கண்கள் குளமாகிறதடி
உன்னை நினைக்கையில்
உன் கண்கள்
உன் குட்டி பாதம்
உன் குறும்புக் கைகள்
உலகை மறக்கச்செய்யும்
உன் சிரிப்பு
உன்னில் என்னை நான் காணும்
உன் மதிமுகம்
என்று என் கற்பனைகளில்
வரைந்த உன்னை
நிஜத்தில் ஏந்த
ஏனோ குடுப்பனை இல்லையே
கண்ணீரில் பயணிக்கும் என்னை
தேற்ற ஏன் உன் வருகை
இல்லாமலே போயிற்று
உன மழலை கேட்க
தவம் கொண்ட என்மேல்
ஏனடி இந்த கோபம் உனக்கு
மறுபிறப்பின் வலியை
உணர்கிறேன் என்னாளும்
என் நிலைக்கண்டு மனமிறங்கி
வருவாயா
இல்லை வரமறுத்து
நான் பெறாத புதுப்பட்டத்தை
சேர்க்கபோகிறாயா

எழுதியவர் : (28-Mar-18, 1:33 pm)
Tanglish : mazhalai
பார்வை : 106

மேலே