தேடுவோம்…

கிளிகள் பறந்துவிட்டன
வெளியே,
கூண்டுக் கிளியானாள்
அன்னை..

பிள்ளைகளுக்குப் பலவேலை,
பறந்துவிட்டார்கள் வெளியே-
பெற்ற தாயை மறந்து..

பெற்றவளுக்கு ஒரே வேலை,
ஒரே நினைவு-
பிள்ளைகளின் நல்வாழ்வு..

ஆனாலும்,
அவளுக்கும் உள்ளதே
வாயும் வயிறும்..

இப்படி
சன்னல் கம்பிகளுக்குப்பின்
காத்திருக்கும்
அன்னையர் ஆயிரம்,
அத்தனைபேர் எண்ணமும் ஒன்றாய்-
பிள்ளைகள் பிள்ளைகள் என்றே..

ஆனால் பிள்ளைகள்-
தேடுவோம் அவர்களை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Mar-18, 7:11 am)
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே