காதல் கணவனுக்கு

குட்டி ஊரிலே,
சுட்டி பெண்ணாய்,
பட்டத்தையும் பட்டாம்பூச்சியையும்,
எட்டி பிடித்து,
துள்ளி குதித்தேன்;
பருவம் அடைந்தாலும்,
அன்பு தந்தைக்கு,
வானத்து தேவதையாய்,
செல்ல குழந்தையாய்,
மகாராணியாய் வாழ்ந்திருந்தேன்;
இன்றோ!
முகமறியா ஊரிலே,
மாலையிட்ட மன்னவனே!
கரம் பிடித்த நாள் முதல்,
கண் மூடும் நாள் வரை,
காதலரியா கன்னிகைக்கு,
உயிரும் நீயே!
உலகமும் நீயே!
காதலும் நீயே!
கள்வனும் நீயே!
தவறேதும் செய்தால்,
வெறுக்காது பொறுப்பாயே!