பருவமே புதுமை
அறிமுகமில்லாத உன்னை பார்த்த அந்த நொடியிலே,
என் புதுமையை என்னுள் அறிமுகப்படுதினாய்...
முன்னும் பின்னுமாய் நாம் பள்ளி சென்றாலும்,
நம் கைகோர்த்து நடப்பதுபோல் உணர்த்தும் நம் பருவம்....
புரியாத பருவமாய் நம் காதல் நம்முள் வளர,
நாமும் கடந்தோம் பள்ளி பருவத்தை...
காலம் தந்த மூன்று வருட இடைவெளி, நம் கை சேர முதல் படி ஆனது,
உணர்ந்தோம் காதலை,மறந்தோம் உலகை...
மகிழ்ச்சியின் இல்லமாய் நம் காதல் வீடு அமைய,
உறவினர்களின் பதிலை எதிர்பார்த்து சிலையாகி போனோம்..
நற்செய்தி விளக்கேற்ற கல்யாணம் அரங்கேற,
கல்யாண புதுமையை உணர உன் வீடு நம் வீடானது....
காதலின் பரிசாய் தேவதை, நம் வீட்டில் குழந்தை பிறவி எடுக்க,
சொல்ல முடியாத உணர்வை நம் குடும்ப பந்தம் தந்தது...
ஒவ்வொரு பருவமும் உணர்வுகளால் நிரம்ப,
பருவமே புதுமையானது....
ஆனாலும்,
என் மனதில் நீ பதிந்த நாளும் ,
உன் கனவில் நான் கலந்த நாளும்,
இன்று வரை விடை தெரியா வினாவாவே உள்ளது நம் இருவர் மத்தியிலும்....