SORNAVELU S - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : SORNAVELU S |
இடம் | : COIMBATORE |
பிறந்த தேதி | : 22-Aug-1959 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 443 |
புள்ளி | : 71 |
ச. சொர்ணவேலு ஆகிய நான் கடந்த முப்பது ஆண்டுகளாக கணக்காளர் மற்றும் தணிக்கையாளராக சுய தொழில் புரிகிறேன். வந்த சோதனை, வேதனை இவைகளை வைத்து சாதனைகளாக மாற்றிக்கொண்டேன். 'எல்லோரும் இன்புற்றிப்பதுவேயல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே' என்ற தாயுமானவரின் சிந்தனையில் உடன்பாடு கொண்டவன். avvalavuthaan
எனக்குள் இருக்கும் என்னை மறந்து, எனக்குள் இல்லா உன்னை நினைந்து; எனக்கு மட்டும் எல்லாம் தா! சோதனை வேண்டாம், உனக்கு எதுக்கு அது இதுவென? எதுவும் வேண்டாம் என, மனிதனுக்குள்தான் எத்தனை எத்தனை குழப்பம்? "முனி"தனக்குள் இருப்பதை உணராவண்ணம், தனி ஒரு மனிதனா விண்ணை வெறித்துப் பார்க்க, பிணி விலக முயற்சி எடுக்க விடில்,வளம் எப்படி நம்மிடம் வந்து சேரும், களம் எப்படி நம் வசமாகும், பலம் எப்படி நம் மனம் வந்து சேரும், நலம் எப்படி நம் உடல் வந்து சேரும், மங்கும் நிலைக்குத் தள்ள வேண்டாம், வாங்கும் நிலைக்கு வளர்த்துவிட்டு, எங்கள் வாழ்வுக்கு அடையாளம் தா என இந்த பொங்கல் நாளில் கேட்போம் உறுதியோடு.
ஹரித்துவாரில் சொன்னதெல்லாம் கிருத்துவத்திலும் இருக்குது; வாடிப்பட்டியோட வாசமெல்லாம் வாடிகன்லயும் வீசுது; தேடிப்போயி சொன்ன சொல்ல காது கொடுத்து கேக்குது; ஓடிவந்து உதவி செஞ்சு முடிஞ்சளவு காக்குது; ஏசு உங்களுக்கு மாத்திரமல்ல எங்களுக்கும் பாஸுதான்.
இழந்தவை விதியின் வெளிப்பாடு; இருப்பவை அறிவின் வெளிப்பாடு; இசைவது ஏற்பதால் அமைவது; இசைப்பது மனதால் அமைவது; இயக்கம் அமைப்பால் வரலாம்; இயற்றல் ஆற்றலால் வரலாம்; இனியொரு விதியினைச் செய்திடுவோம்; இனியதொரு வாழ்வுதனை எய்திடுவோம்; இருபது இருபது (௨௦௨௦) மறக்காமல் இருப்பதற்கு; இருபது இருபத்தொன்று (௨௦௨௧) மறுக்காமல் ஏற்பதற்கு; எதிர் கொள்வோம்; எழில் பெறுவோம், என இந்த புத்தாண்டில் வாழ்த்தும் ஆணைக்குளம் சங்.சொர்ணவேலு, கோவை.
வாழும் நிலையில் குழப்பம்,
வசமற்று இருப்பது பழக்கம்,
வீழும் நிலையிலும் தயக்கம்,
தெளியுமா இந்த மயக்கம்,
முடங்கியிருந்த மூளைதனை
அறிவுகொண்டு எழுப்பிவிடு,
அடங்கியிருந்த இதயம்தனை
ஆற்றல் கொண்டு இயங்கவிடு,
உதவிக்கு இறைவனைத் தேடிடுவீர்,
கண்களிலே சாத்தியமா படமாட்டான்,
கதவுக்கு அருகினிலே இருந்திடுவான்,
ஆனாலும் உன் கையைவிடமாட்டான்,
"மனிதம்" கொண்ட மனிதனை அனுப்பிடுவான்,
அவனும் உரிய நேரத்திலே வந்திடுவான்,
கணிதம் தப்பாது நிலைமைதனை சரிசெய்வான்,
மலர்ந்த முகத்துடன் உனைவெளிக் கொணர்வான்.
௨௦௨௦ ன் தீப ஒளியில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும்,
உ
மனிதன் என்பவன் யார்?
பொதுவாக மனிதனின் தோல்விக்கான காரணம் என்ன ?
என்னுள் சில கேள்விகள் ......
௧. கவிதைக்கு தேவை என்ன ?
௨. கவிதைக்கு என்ன தேவை?
௩. கவிதைக்கு அழகு என்ன?
பெண் புத்தி பின் புத்தி என்று கேள்வி பட்டிருப்போம். அதன் உண்மையான பின்னணி என்ன?
எங்கெங்கும் பசுமைக்கு 'நீர்வளம்" எனக் கரணம். உன் நடை உடை பாவணைக்கு 'நீர்"வளம் எனக் கரணம்."நீர்வளம்" தொடர ஆறு ஏரி கடல் என உதவனும். "நீர்"வளம் தொடர முயற்சி வெற்றி என உதவனும். "ஹேவிளம்பி"யில் "ஹே" போக இருப்பதை "விளம்பி"(2018) முழங்கி வாழ்த்திடும் ச.சொர்ணவேலு, கணக்காளர், கோவை.
எட்டிளமைப் பருவப் பெண்கள்
(ஆசிரியப்பா)
பேதைப் பெதும்பை அரிவைத் தெரிவை
கேள்மங்கை மடந்தை இளம்பெண் பின்னும்
பேரிளம் பெண்ணாம் இல்லை வேறு
போதுமென வைத்தார் பெண்பரு வமெட்டே
அழகுக் கழகுகள் பாரணி கலனையும்
அழகியர் ஒதுக்கார் அணியையும்
பெண்ணென் பாளென் றுமிளமை யாமே
----ராஜப் பழம் நீ (18-1-2018)
மோடி - பாஜக என்றால் பெரும்பாலோர் வெறுப்பது ஏன் ?
வாழ்வின் பயணங்களில் வழி பல காட்டும் 'தை'; அனுபவம்தனைப் பாடமாகத் தரும். அ'தை' நெஞ்சில் நிறுத்தி அசை போடும் மன'தை' கேட்டுப்பார். அது தரும் எப்போதும் நல்ல'தை'. இனியாவது பொங்கல் இனிக்கட்டும், இருக்கட்டும்.