உண்மை காதல்

விழி மூடிய பின்பும்
உன் உருவம் என் கண்ணுள்
பேசாதே என சண்டை போட்டும்
உன் பேச்சு சத்தம் என் அருகே
நீ இல்லை என்றாலும்
நீ மட்டுமே என்னுள்
உன் நினைவில் சிக்கி தவிக்கும்
என்னை அறிந்தால் சென்றது
ஏனோ?
என் கண்ணீர் துளிகள் மொத்தமும்
உனக்கென சிந்த வைத்து
நீ தனிமையில் வருந்துவது
ஏனோ?
தண்டனை உனக்கு மட்டும் அல்ல
எனக்கும் என புரியாதது
ஏனோ?
நம் பிரிவில் மற்றவர் இன்பம்
கண்டது ஏனோ?
விட்டு கொடு என சொல்லி
இருந்தால்
என் உயிரையே கொடுத்திருப்பேன்
விட்டு விடு என சொல்லி விட்டாயே???
மனம் முழுவதும் வலியுடன்
வாழ்கிறேன் வழி தெரியாமல்!!!

எழுதியவர் : உமா மணி படைப்பு (31-Mar-18, 12:20 am)
Tanglish : unmai kaadhal
பார்வை : 148

மேலே