அவன்
இளமை என்னும் ஒரு
இனிமைக் காலத்தில்
கருப்பு நிற எழிலுடன்
என்னை கவர்ந்தான் ஒருவன்!
என் இதயத்தில் "காதல்"
என்ற ஒரு கோட்டையைக் கட்டி
அதற்கு அவனை இரையாக்கி
இனிமைப் பட்ட இன்பங்களை
இன்று கவிதையாக்குகிறேன்- அதோடு
எனக்கு இறையானவனின்
நிலையையும் இங்கு
எடுத்துரைக்கிறேன்!!
முதல் தோழன் அவனில்லை
ஆயினும்
முழுவதும் அவன் மட்டுமே காதலன்!
பிரியாத வரம் ஒன்றினை கேட்கும்
பிரியமானவனும் அவனே!!
எதார்த்தமான பேச்சில்
என்னை இழுத்து
எப்போதும் என்மீது அவனின்
கண்களை சாய்த்து
காதலின் விதையை
நெஞ்சில் ஊன்றி இரக்கத்தோடு
என்னை ஈர்த்தான்!!
என் கண்களை சிறைவைத்து
என் கனவுகளை மறைத்து வைத்து
ஏகாந்த நினைவோடு
எப்போதும் இருக்க வைத்த
இதய கள்வனவன்!!
மலர் என்றாலே
மௌனம்தான் - ஆனால்
மௌனத்தினை மனதோடு ஏற்று
அதனை மகிழ்ந்து இரசிப்பான்!!
அவன் திசையில் நான்
திரும்பி பார்க்காத வேளையிலும்
அவன் விரும்பி பார்ப்பான்- தீராத
அவனின் செவிகள்
தினமும் கேட்க துடிக்கும்
"முதல் கவிதை என் பெயர்தான்"!!
என் வருகைகள் எல்லாவற்றையும்
அவனின் பார்வையின்
பதிவேட்டிற்கே! எனது
இமைகள் சேராமல்
இரண்டு நிமிடம் பார்த்தால்!
இவ்வுலகத்தையும் எனக்கு
சொந்தமாக மாற்றுவான்!!
இம்சைகள் எல்லாம்
நான் கொடுத்தும் - அதையெல்லாம்
இன்னுமென்று ஏற்றுக்கொள்வான்!!
உதட்டில் பிறக்கும்
வார்த்தைக்கும் - அதில்
உருவாக இருக்கும் வாழ்க்கைக்கும்
உடன்வர ஏங்கி
உயிர் வளர்ப்பான்!
தீயாக நிமிர்ந்து நான் பார்த்தாலும்
எனது பார்வைகளில்
தீராத தாகம் கொண்டவன்
வெயில் மீது
என் பாதம் படும்போதெல்லாம்
அவனின் விழிகளை அங்கு
மேகமாக மாற்றுவான்!
வெண்ணிற பற்களில்
வெளிவரும் எனது புன்னகையை காண
பூமியெங்கும் காத்திருப்பான்!!
நான் சூடும் பூவோடு
நாள்பொழுதும் மயக்கம் கொள்ள
நேசமென்ற ஒன்றைக் கொண்டு
நெடுநேரம் வீசும் வாசமாவான்!!
கடந்து சென்றது
நானென்று தெரிந்தும்- கண்டது
நிஜமா? என தெரியாமல்
நித்தமும் நிம்மதியின்றி அலைவான்!!
ஜென்மங்களோடு பயணம் செய்ய
"ஜலனங்களை மீட்டெடுத்த"
ஜன்னல் ஓர இரசிகனவன்!!
திரைக்கு எட்டாமல்
நான் சென்றால்
தினங்களின் மேல் கோபம் கொள்வான்!!
கண்மூடி படுக்கச் செல்லும்
நாட்களில் - என்னால்
தோன்றிய காயங்களில்
அவன் விழிகளை திறப்பான்!!
பேசும்போது உறவென்றும்
நான் பேசியதே
அவனின் வாழ்க்கையென்றும்
நினைவாலே
நீர் பறவையாக
நெடுந்தூரம் பயணம் கொள்வான்!!
காதலென்றாலும் சரி
காவலென்றாலும் சரி
காயம் கண்டபோதும்
கடை நொடியில் "என்"
கண்கள் மூடும் வரை
இமையாக உடன் வரும்
"பிரியமானவளின்"
இன்னொரு உயிரும் அவனே...!!!