வடை
சும்மா இருந்தா வா
போயி வடை சாப்பிட்டு விட்டு வரலாம்
நான் மழலையாய் இருக்கும் பொழுதே
என் அம்மா சொல்வார்
நிலவில் ஒரு பாட்டி
வடை சுட்டு கொண்டிருக்கிறாள் என்று
அங்கே போனால்
நமக்கும் வடை கிடைக்கும்
அந்த பாட்டிக்கும் பேச்சு துணைக்கு
ஆள் கிடைக்கும்