மணமாகாத மாலை
பிடித்த உறவுகளுக்கெல்லாம் மாலை
தொடுத்தால் மணமாலை ஆகிவிடாது
ஆகவும்கூடாது என்று தான் ஆண்டவன்
விதித்தான் வேறுபாடுகளை - அவை
பால் ,பண்பாடு , வயது ,சாதி ,இனம் ,மதம், மொழி இவைகளின் பாகுபாடு
அன்புக்கும் வடிவம் உண்டு
அர்த்தமும் உண்டு..
மாலை சூடாதவை,சூடமுடியாதவை
பூச்சரத்தில் ஒரு பூவாய்
புது உறவு பேர் சூட்டி வாழ்ந்து நகர்கிறது...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
