சிவப்பழகி

இவள்
ஷு அணிந்து நிற்கும்
பூ

இவள்
குடைக்குள்
பெய்யும் மழை
மழைதான் மனிதன்
செய்யப் பிழை

வானவில்லைக் கையில்
ஏந்திய வனவில்

தலையில்
ஜடைக்கு பதில் குடை

இவள்
குடைக்குள் நிற்கும் வடை

உடையணிந்தும் தொடை
பெற்றோரில்லையோ போட தடை ?

தேகத்தில் சிவப்பாடை
முகத்தில் சிரிப்பாடை அணிந்தவள்

அடைமழை வந்தால்
குடை என்ன செய்யும்
குடைதாண்டி வந்தால்
உடை தடையா செய்யும் ?

இவள்
நட்சத்திரங்களுக்கு
நடுவே நிற்கும் பெண்சித்திரம்

பெண்ணுக்கே உரிய
நாணம்
முகத்தில் எங்கேயும் காணோம்

தொல்கப்பியர்
தோல்காப்பியம் எழுதியிருப்பார்
இவளின் சிவப்பழகைக் கண்டிருந்தால்

இவள் கிளிண்டன்
வீட்டில் வளர்ந்த கிளி அல்ல
கிளியோபாட்ரா வீட்டில் மிளிர்ந்த கிளி

புதுவைக் குமார்

எழுதியவர் : குமார் (16-Apr-18, 10:48 pm)
பார்வை : 318

மேலே