இந்த அனாதையின் ஏக்கம்

கொலை குத்தம் பண்ணலையே!
ஒரு பாவமும் செய்யலையே!

பால் மணமாறா பிஞ்சுல,
நான் செஞ்ச பாவமென்ன???

பாலுக்கு ஏங்குறேன்;
பசிக்கு அழுகுறேன்;

கிடைச்ச சோத்த தின்னுகிட்டு,
கிடைச்ச இடத்துல தூங்குறேன்;

பஞ்சு மெத்தை இல்ல;
கொஞ்சி பேச ஆளில்ல;

கெஞ்சி கெஞ்சி கேட்டாலும்,
கொஞ்சம் கூட இரக்கமில்ல - அந்த கடவுளுக்கு!

என்னை சேர்த்த இல்லத்துல,
அனாதை இல்லத்துல,

மாதாமாதம் கொண்டாட்டம்;
பிறந்தநாள் கொண்டாட்டம்;

ஆனால் எனக்கு இல்லையே!
எனக்குதான் யாருமே இல்லையே!

இறுக்கமான கடவுள்கிட்ட,
இரக்கத்தோட வேண்டுறேன்;

உணவிட்ட அண்ணா அக்கா,
நீண்ட நாள் வாழணும்னு;

இருந்தாலும் ஒரு ஏக்கம்;
என் மனசு ஓரம்;

என் பிறந்தநாள் எப்போ???
அதை யாரு கொண்டாடுவா???

எழுதியவர் : மா செந்தில் லோகு (20-Apr-18, 2:39 pm)
சேர்த்தது : செந்தில் லோகு
பார்வை : 153

மேலே