பிரம்மா

கவிதை நானும் எழுத
ஒரு அல்ப ஆசை...
எப்படித் தொடங்கி எங்கு முடிக்க?
வரிகளை வெளியே தேடவா?
மண்டைக்குள் குடையவா?

காணும் காட்சியையே
கவிதையாக்க முயற்சிக்கவா?
காணாத கற்பனையை
கதை திரித்துச் சொல்லவா?

எழுதுவதற்கு ஆசை
எழுத்தின் மேல் அல்ல...
படைத்தலின் பரிணாமங்களின்
சிறு துளியாய் அமையும் போது...

பிரம்மன் பாவம்
எத்தனை பிய்த்துக்கொண்டிருப்பாரோ?
ஒவ்வொரு படைப்பையும்
கவிதையாய் வரையும் போது...

எழுதியவர் : shruthi (10-Aug-11, 1:12 am)
சேர்த்தது : shruthi
பார்வை : 431

மேலே