பாவம் சாபம்

பெற்றவள் யாரென்று தெரியாமல்
எடுத்து வளர்க்க யாரும் இல்லாமல்
ஒவ்வொரு பருகிருக்கும் ஏங்கி ஏங்கி
மழைத்துளியை தாகத்தின் தீர்வாய் கொண்டு
உயர்ந்து வரும் உலகத்தில்
ஈனமற்ற கொடூர பாவிகள் விளையாடி
உயிர் வாழ போராடிக் கொண்டிருப்பவளின் வயிற்றில்
ஓர் உயிரைச் சுமக்கச் செய்து
பிறப்பின் அர்த்தம் தெரியாமல்
வாழ்வதன் காரணம் புரியாமல்
இருப்பவளை....
இருளில் தள்ளி மூழ்க விட்டு
அவள் வாழ்வு என்னும் கேள்விக்குறிக்கு
இவ்வுலகம் தரும் பட்டம்
"பாவம் செய்தவள்" "சாபம் வாங்கி வந்தவள்"
ஹ்ம்ம் .... உண்மை தான்...
ஏதும் இல்லாமல் தோன்றியது
அவள் செய்த பாவம் !
ஈரமற்ற இவ்வுலகில் பிறந்தது
அவள் வாங்கி வந்த சாபம் !

எழுதியவர் : Manjula (30-Apr-18, 11:18 am)
சேர்த்தது : Manjula
பார்வை : 86

மேலே