காதல்!!!

இனம் புரியாத உணர்வு "காதல்"

இதமளிக்கும் உறவு "காதல்"

இதயமறிந்த மொழி "காதல்"

இருவருக்கு மட்டும் தெரிந்த
இரகசிய உலகம் "காதல்"

இதழ் சொல்ல தடுமாறும் வார்த்தை "காதல்"

இருள் கொண்ட வானில்
ஒளிரும் விளக்கு "காதல்"

இசையாய் ஒலிப்பது "காதல்"

இறைவனிடத்திலும் மலர்வது "காதல்"

இறுதி வரை நிலைப்பது "காதல்"
நம் இறுதி ஊர்வலத்தில்
மலராய் உதிர்வது "காதல்"

இத்தகு காதல் நான் இறந்தாலும்
நான் புதையுண்ட இடத்தில்
புல்லாய் முளைக்கட்டும்.......!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (4-May-18, 11:10 am)
பார்வை : 66

மேலே