சிலிர்க்கின்றது தமிழே
தாய் தந்த தமிழே
தந்தை கொடுத்த சொல்லே
வீரம் கொடுத்த மண்ணே
நெஞ்சில் ஈரம் கொடுத்த உறவுகளே
அன்பை தந்த நட்பே
அன்பிற்கு இலக்கணம் கொடுத்த இலக்கியமே
புரட்சிக்கு வித்திட்ட செங்கோலே
நீதிக்கு வித்திட்ட மண்ணே
எல்லாம் வல்ல பெருந்தகையே
சிலிர்க்கின்றது உமது பெருமை கண்டால் தமிழே