மணம் முடிப்பேனடி

வான் வழி நீந்தி
பால் வழி அண்டம்
தாண்டி
அங்கே ஒரு கண்டம்
கண்டெடுத்து
அதில் ஒரு பிரம்மாண்ட
மண்டபம் கட்டமைத்து
உள்ளூர் வாசி முதல்
வேற்று கிரக வாசிகள் வரை
ஒன்றாய் அழைத்து வந்து
அவர்கள் வாழ்த்து சொல்ல
நட்சத்திரங்களை
வானவில் நூலில் கோர்த்து
செய்த தாளி ஒன்றை
உன் கழுத்தில் நானும்
மூன்று முடிச்சு போட்டு
என்னையும் உனக்குள் பூட்டு போட்டு
என் காதல் நிலாவே!
உன்னை மணம் முடிப்பேனடி...!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (11-May-18, 10:42 am)
பார்வை : 48

மேலே