துப்பாக்கிச்சூடு

சுயநலத்துக்குப் போராடவில்லை
சுவாசத்திற்குப் போராடினாய்
உன்வாழ்க்கைக்குப் போராடவில்லை
உயிர்வாழப் போராடினாய்
நயவஞ்சக நரிக்கூட்டங்கள்
சாதியாலும் இனத்தாலும் மதத்தாலும்
தரம்பிரித்துச்சூழ்ச்சி செய்து
வேட்டையாடிப் பிழைக்கிறது
பிணங்களைத் தின்றவாறே..!
உன் வியர்வை உணவாச்சு
உன் உழைப்பு உடையாச்சு
உன் குருதியை உறிஞ்சிக்குடித்தது
உடல் வளர்த்த ஓநாய்கள்
நெஞ்சினில் சுடச்செய்து
நீதியைக் கொளுத்தியதோ
ஒட்டுப் போட்டு ஆளச்செய்தாய் உனை
வேட்டுப்போட்டு சாகச்செய்தான்
நீ செய்துவிட்டக் குற்றமென்ன
கொள்ளையடித்தாயா
கொலைக்களவு புரிந்தாயா
மல்லய்யா போல் கடன்வாங்கி
மருதேசம் போனாயா..
இல்லை தேசத்தைக் கூறுபோட்டு
தெரியாமல் விற்றாயா
இதுவெல்லாம் குற்றமல்ல
உயிர் வாழப் போராடுவது
உலகமகா குற்றம் ஆச்சோ?
நர மாமிசம் தின்றும்
நல்லவர்போல் ஊளையிடும் நரிகளே
உங்களுக்கும் சேர்த்துதானே இப்போராட்டம்
பிணங்களின் மீதா உம ஆணவத்தேரோட்டம்
மானத்தமிழன்
மார்பில் ஏந்தினான் தோட்டாக்களை
ஈனப்பிறவிகளே இதுபோல் நீங்கள்
எப்போது சாவீர்கள் ?
செந்நாப்புலவனின் செந்தமிழ் மேல் ஆணை
எம் இனத்தோர் கண்முன்னே நீங்கள்
தொந்தி சரித்து உடல் புழுத்து
ஊன் நாறி உறவும் வெறுத்து
உம் சந்ததியும் அழியட்டும்
என் இனத்தைக் கொல்லவந்த எமனே
கெடுக உன் குடி கெடுக உன் கொற்றம்
கெட்டொழிக்க உன் ஆஸ்தியெல்லாம் !
காயங்களுக்கு உரிய மருந்து
காலத்திடம் உள்ளது அடங்குவாய் ஆறடிக்குள்

எழுதியவர் : பெ .அசோகன் (25-May-18, 9:59 pm)
சேர்த்தது : கவிஞர் பெஅசோகன்
பார்வை : 56

மேலே