மனதின் ஏக்கம்
கார்முகில் பெய்யாதோ
களனிநிலம் விளையாதோ
பாருலகில் ஏழைமக்கள்
பட்டினியும் விலகாதோ
மண்ணாசை பெண்ணாசை
மட்டில்லாப் பொருளாசை
பொய்களவு மதுபோதை
போக்கற்ற கொடுஞ்சயல்கள்
எந்நாளும் மறையாதோ
எண்ணங்கள் சிறக்காதோ
இனியாலும் ஊர்முழுதும்
இன்பங்கள் நிறையாதோ
அஷ்றப் அலி