மனதின் ஏக்கம்

கார்முகில் பெய்யாதோ
களனிநிலம் விளையாதோ
பாருலகில் ஏழைமக்கள்
பட்டினியும் விலகாதோ
மண்ணாசை பெண்ணாசை
மட்டில்லாப் பொருளாசை
பொய்களவு மதுபோதை
போக்கற்ற கொடுஞ்சயல்கள்
எந்நாளும் மறையாதோ
எண்ணங்கள் சிறக்காதோ
இனியாலும் ஊர்முழுதும்
இன்பங்கள் நிறையாதோ

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (30-May-18, 12:02 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 206

மேலே