அழகு

பூவின் வாசம்
பூவுக்கு தெரியாது
அதை மொய்க்கும்
வண்டுக்கு மட்டும்
தெரியும் அதன்
வாசமும் மகரந்தமும்
பெண்ணே உனக்கு
தெரியாது உந்தன்
அங்கங்களில் படைத்தவன்
வைத்த எழிலின் சூட்சுமங்கள்
என் கண்களைக் கேள்
அது சொல்லும் இல்லை
என் பார்வையைக் கேள்
அது சொல்லும் -அது
உந்தன் ஏழிலைப்
படம் பிடித்து
என் மனதில் பதியவிட்டதே
நீ ஒரு பேரெழில் என்று
என் மனமும் சொல்கின்றதடி
நீ இன்னும் நிலைக்கண்ணாடி முன்
நின்றதில்லைபோலும்,நான்
சொல்கின்றேன் பெண்ணே கேளடி
கண்ணாடி முன் நின்று
உன் அழகைப் பார்
என்னிடம் அதன்பின் சொல்வாய்
நான் சொன்னது நிஜமா மிகையா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Jun-18, 4:52 pm)
Tanglish : alagu
பார்வை : 717

மேலே