நீ இன்னும் பேசவில்லை

உண்ணும் மனதில்
உனது நிழலின் கண்ணீர்.
நீ நிரம்பியது நினைவில்
அதுவோ உன் காதல்.
....அது
நடுக்குளத்து முதலை.
யூகிக்கும் ஆர்வங்கள்
அலைகளை இழுக்கும் வீடு.
நீ...
இனி...
வரலாம்...
அல்லது...
பனியில் தூங்கும் தேள்
உன் மர்மம்.
சொல்லாத மர்மங்களில்
காதலை உதிர்த்து
உதிர்த்த காதலை
பிடித்தும் வைக்கிறது
காமத்தின் சுளுக்கை
மந்திரிக்கும் யௌவனங்கள்.
பெருகிப்பெருகி
கனன்று அடங்கிப்புகையும்
ஏதோ ஒரு சொல்
ஒலியற்று மொய்க்கிறதா...
அது
என் இரவில் பிழிந்த
அமிலத்தின் கசப்பு...
கொட்ட கொட்ட ஓடி
அயர்ந்து நின்ற உன்னிடம்
தொப்பியேந்தி இரவல் கேட்கும்
என் காதலை மிச்சமிருந்தால்.

எழுதியவர் : ஸ்பரிசன் (3-Jun-18, 6:47 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 135

மேலே