பழம் பாலில் பால் தரையில்
பழம் பாலில்; பால் தரையில்!
கவிதை அருகில் வந்து அமர்ந்து
காதில் ஒப்பித்துக் களைத்தது.
காகிதமற்றுப் படபடத்த நான்.
ஒவியம் பக்கம் வந்து நின்று
படிமம் எடுக்கச் சொல்லித் தூண்ட,
தூரிகையற்றுத் தவிக்கும் நான்.
கணிப் பொறி சற்றே வந்து
மென் பொருளும் கூடக் கொண்டு
இயக்கச் சொல்லி ஏங்கையில்
மின்சாரமற்று அதிர்ச்சியில் நான்.
செல் ஃபோன் கூட நின்று
சிணுங்கிச் சிணுங்கிக் கூப்பிடவும்
அழுத்தும் பட்டன் அறியாத நான்.
காதல் சொல்லக் கற்க வேண்டும்-
அவள் அருகே இல்லாத போது!
அப்படியே மனனம் செய்து
ஒப்பிக்கும் உரம் வேண்டும்-
அவள் அருகே வரும் அந்தக் காலம்!
கைகூடும் நேரம் வரை
காகிதம், தூரிகை என்று நான்
கவிதை சொல்வதே வேலை!