உணர்கிறேன் கூட்டத்தில் தனிமையை

நீ இல்லாமல் நான் மட்டும்
கலந்து கொண்ட திருமண நிகழ்வு

எங்கும் உறவினர்கள் கூட்டம்
குழந்தைகளின் அழுகை சிரிப்பு
மத்தள லய ஒலி
நாதஸ்வர இன்னிசை
அறுசுவை உணவு
பெற்றோரும் என்னருகில் ...

எந்த இரைச்சலும் கேட்கவில்லை
அறுசுவையும் ருசிக்கவில்லை
பெற்றோருடனும் உறவாடவில்லை

நான் இங்கே இருந்தாலும்
என் எண்ணம் உன்னைச் சுற்றி .....

பட்டாடை உடுத்தியதும்
அழகுடி என்னும்
உன் கொஞ்சல்கள் இல்லை ....

சாப்பிடுமா என்னும்
உன் அக்கறை இல்லை .....

கூட்டத்தில் என்னையே
தேடும் உன் கண்களில்லை.....

யாரும் அறியாமல்
என் கரம் கோர்க்கும்
உன் விரல்களில்லை....

உணர்கிறேன் கூட்டத்தில் தனிமையை ....
சீக்கிரம் வந்து விடு...
வாசலில் நிலைக்கிறது கண்கள்...

எழுதியவர் : கீர்த்தி (11-Jun-18, 11:27 am)
பார்வை : 153

மேலே