அவளின் நினைவுகளில் இரவுகள்

மதி மயங்கும்
மாலையில்
நான்
உரையாடுகிறேன்
உன் நினைவோடு.......

இன்று போல்
என்றும்
நான்
இரவை
இரசித்தது இல்லை.....
காற்றுக் கூட
ஓய்வெடுக்கும்
இந்த
நள்ளிரவில்
என்
மனது
ஓய்வெடுக்காமல்
உன்னையே நினைத்து
கொண்டிருக்கிறது........

என்ன ஒரு
இன்பம்
நள்ளிரவில்
அமைதியான
சூழ்நிலையில்
உன்னை
நினைத்துக்கொண்டு
தூங்காமல்
இருப்பது.....

இரவின்
அமைதியான
தாலாட்டில்
உன் ஞாபகம்.....
வேறு எங்கு
கிடைக்கும்
இது போல்
ஒரு சுகம்............

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (16-Jun-18, 8:45 am)
பார்வை : 136

மேலே