அவன் இனிப்பில் மாட்டிய இவள் ஈ

அவன் உருவம் என்னை மயக்கியது
அவன் பார்வை என்னை வீழ்த்தியது
அவன் பின்னால் நான் ...................
அவன் பேசினான் பேச்சிலேயே
ஓர் இன்பம் கண்டேன் நான்
மயக்கிடும் அப்பேச்சில் என்
சிந்தை இழந்தேன் விளக்கின் முன் விட்டிலாய்
இதைத்தொடர்ந்து காணாத போதெல்லாம்
அவன் விடுத்த எஸ்.எம்.எஸ் ஒவ்வொன்றும்
காதல் குறட்பாவாய் என் மனதை அள்ளியது
மீண்டும் மீண்டும் சந்திப்பு தொடர
மோகம் உச்சந்தலையில் ஏற
காமம் கண் மூட நான் அவன் வசமானேன்
கரும்பு செக்கில் ஈபோல -கரும்பின்
இனிப்பில் ஈ , மீளவில்லை
செக்கின் பிடியிலிருந்து ......அவன்
இனிப்பாய் இன்னும் இனித்துக்கொண்டிருக்கிறான்
இன்னும் ஓர் ஈ இனிப்பில் மாட்டாதென்று
நான் .என்னை இழந்தேன், வாழ்வையும் சேர்த்து
ஈ செக்கில் இறந்தது
நானோ இறக்கவில்லை, ஏமாற்றத்தில்
குற்றுயிர் ஈயாய்...........

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jun-18, 10:04 am)
பார்வை : 70

மேலே