கன்னித்தமிழ் மொழி
முன்னம் தோன்றிய முதற்மொழியாம்
..... முதுமை அடைந்திடா பொன்மொழியாம்
மென்மை பொருந்திய செம்மொழியாம்
..... மெய்மை கூறிடும் நன்மொழியாம்
உன்ன தமொழியாம் உயர்மொழியாம்
..... உலகே போற்றிடும் தனிமொழியாம்
என்றும் சுவைதரும் கனிமொழியாம்
..... இளமை பொங்கிடும் தமிழ்மொழியாம்
தமிழின் பெருமை அறிந்திட்டே
..... தமிழை நாளும் சுவாசிப்போம்
அமிழ்தாய் இனிக்கும் இலக்கியத்தை
..... அறிந்து நாளும் படித்திடுவோம்
தமிழால் நாமும் இணைந்திங்கு
..... தமிழை பருகி உயர்ந்திடுவோம்
தமிழர் என்ற உணர்வோடு
..... தலைநி மிர்ந்தே நடந்திடுவோம்
ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்