கோபக்காரி

கோபத்தை மொத்தமா குத்தகைக்கு எடுத்திருப்பா போல...

ஏன் கோபப்பட்றானு யோசிச்சு யோசிச்சு மண்டைதான் வெடிக்குது...

எத்தனை முறை கேட்டிருப்பேன்னு தெரியல, மன்னிப்பு கேக்குற வியாதி என்ன தொத்திக்கிச்சி...

அவளோட முகம் மாறும்போது, மரணபயம் உலுக்கி எடுத்துருது...

நல்லவனா கெட்டவனான்னு என்னை கேட்டு கேட்டு அலுத்துப் போயிட்டேன்...

என்னதான் நடந்தாலும் அந்த கோபத்துக்கு உள்ளேயும் இருக்குற அந்த அன்பை உணரயில தேகமெல்லாம் புல்லரிச்சு போகுது...

எழுதியவர் : ஜான் (7-Jul-18, 8:22 am)
பார்வை : 1180

மேலே