சோகக்கண்ணீரில் தத்தளிக்கிறேன் 555

என் அன்பே...

பகலெல்லாம்
உன்னை பார்ப்பேன்...

என் வாசலை நீ
கடக்கும்போதெல்லாம்...

இரவிலும் உன்னை பார்ப்பேன்
நிலவே நீ என்று...

நீயும் நானும் எதனையோ
விவாதம் செய்ய...

தென்னை ஓலையில்
வந்தமர்ந்த...

ஜோடி பறவையை பார்த்து
நீயும் நானும் என்றாய்...

என் முகம்பார்த்து எனக்குள்
இருந்த காதலை நீயே சொன்னாய்...

பனைமரத்தில் தேள்
கொட்டியவன் போல் நான்...

சிரிப்பதா அழுவதா
தெரியாமலே சந்தோசத்தில்...

எப்போது ஜோடி பறவைகள்
பார்த்தாலும் உன் முகம்தானடி...

என்னை கடந்து செல்கிறாய்
யாரையோபோல் இன்று...

காதலெனும் இன்பநீரில்
நீந்தினேன் அன்று...

பிரிவு என்னும் சோகக்கண்ணீரில்
தத்தளிக்கிறேன் இன்று...

காரணம் ஏதுமின்றி
என்னை தவிக்கவிட்டவளே...

என் முகம்பார்த்து காதலை
சொன்னவள் நீ...

முகம்பார்த்தே பிரிவெனும்
வார்த்தை சொல்லிவிடடி...

ஒருமுறை உன்முகமும்
என் முகமும்...

நேருக்குநேர்
ஓர் இறுதி சந்திப்பு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (20-Jul-18, 6:56 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1092

மேலே