எங்கும் எதிலும்
உலகப் படைப்பின் முதல்நாள் இன்று
எங்கும் இனிய மென்மை காற்று
எங்கும் சுத்தம் சுமந்து தண்ணீர்
எங்கும் பசுமை தாங்கி பூமி
எங்கும் சிரித்து திரியும் பறவை
எங்கும் குதித்து மகிழும் விலங்கு
எங்கும் ஒழுக்கம் வானம் முழுக்கும்
தீமை இல்லை துக்கம் இல்லை
அங்கு அன்று மனிதன் வந்தான்
ஆகா என்று சொக்கி நின்றான்
காற்று தண்ணீர் பூமி கெடுத்தான்
புதிதாய் மாசைக் கண்டு பிடித்தான்
எதிலும் அவனின் குதர்க்கம் நுழைத்தான்
எதிலும் நுழைந்தும் போக்கை மறித்தான்
எதிலும் இனிமேல் முடியா வேளை
மனதில் நுழைந்து களையை வளர்த்தான்
மோசம் துவேசம் பொறாமை கோபம்
சாதி பேதம் தீங்கு அனைத்தும்
மூன்று போகம் வளர்த்து வந்தான்
முச்சந்தியில் நின்று ஞானம் வதைத்தான்
முடிந்த வரைக்கும் தவறு இழைத்து
வாழ்க்கை முடிய நரகம் சென்றான்
நரகம் கூட சொர்க்கம் போல
பூமியை விட சிறப்பாய் கண்டான்
அடுத்து அதையும் முடித்து வைத்து
எங்கும் எதிலும் மனிதம் அழித்து
வம்பும் மிதப்பும் அதிகம் பெற்று
கடவுளைக் கண்டாலும் நீ யாரென்பான்?