ஒரு சக்கையின் சிதறல்களில்

எண்ணற்ற சக்கரங்கள்
வலுவாய் சுற்றுகிறது
சுற்றலின் உள் நுழைந்து
எலும்பும் தசையும்
உள்ளூரும் இரசமும்
எண்ணமும் பிறழாமல்
வலுவாய் பிறந்திட ஆசை...
முற்று பெற்றிடாத புள்ளியில்
ஒவ்வொரு திசையிலும்
முளைத்திடும் கோடுகள்
கோடுகளின் கடையில்
மீண்டும் தன்னகத்தே
வரைந்து கொள்ளும்
வட்டங்கள் மீண்டும் மீண்டும்...
ஆலை புகுந்த
கரும்பாய் பிறிந்து வரும்
சிதறல்களில்
பொழிவு தேடிடும்
மனமும் வாழ்வும்...

எழுதியவர் : சுரேஷ் குமார் (22-Jul-18, 12:05 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 62

மேலே